சென்னை, நவ. 22 - வேளச்சேரி கரையோர குடியிருப் புகளை கணக்கெடுப்பு நடத்த வந்த அதி காரிகள்,மக்களின் எதிர்ப்பால் திரும்பி சென்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு: வேளச்சேரி ஏரி 265 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது 55 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. எஞ்சிய 200 ஏக்கர் நிலம் குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது. கடந்தாண்டு காந்தி நகர், சசி நகர் குடியி ருப்புகளை ஆக்கிரப்பு என்று வகைப் படுத்தி நீர்வளத்துறை நோட்டீஸ் வழங்கியது. அண்மையில் தென்மண் டல பசுமை தீர்ப்பாயம், ஏரியை முழுமை யாக மீட்க உத்தரவிட்டது. இதையடுத்து சசிநகர், காந்தி நகர், ஜெகநாதபுரம் பகுதியில் கணக்கெடுப்பு நடத்த செவ்வாயன்று (நவ.19) அப்பகுதிக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் வந்தனர். இதனையடுத்து அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌ லானா, சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், “50 ஆண்டுகளுக் கும் மேலாக வசிக்கும் மக்களுக்கு ஆதார் அட்டை, மின் இணைப்பு, சமை யல் எரிவாயு இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களை ஆக்கிர மிப்பாளர்கள் என்று வகைப்படுத்துவது ஏற்புடையதல்ல. காந்திநகர், சசி நகர், ஜெகநாதபுரம் பகுதியானது தண்ணீர் தேங்குமி டமோ, தண்ணீர் செல்லும் பகுதியோ அல்ல. 2009ஆம் மக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில், காந்தி நகர், சசிநகர் குடியிருப்பு பகுதி சர்வே எண் 123/1 நீர் நிலை அமைப்பி லிருந்து குடியிருப்பு பகுதியாக மாற்ற ப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. எனவே, அரசாணை 854ன் படி பட்டா வழங்கக் கோருவது நியாயமானது. பட்டா வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 15 ஆண்டுகளாகிறது. தலைமைச் செயலக குடியிருப்பு, மசூதி காலனி, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் வேளச்சேரி ஏரியின் உட்பகுதிக்குள் தான் உள்ளது. ஏரியின் மைய பகுதி யில் உள்ளவர்களுக்கு அரசு நில வகை மாற்றம் செய்து கொடுத்துள் ளது. எனவே, ஏரிக்கரையின் வெளிப்புற முள்ள காந்தி நகர், சசி நகர் மக்களுக் கும் பட்டா வழங்க வேண்டும். வீடு களை அகற்ற மார்க்சிஸ்ட் கட்சி அனுமதி க்காது” என்றார். இந்த நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ளியன்று (நவ.22) ஜெகந்நாதன் புரத்தில் கணக்கெடுப்பு நடத்த வந்தனர். அதிகாரிகளை நகரு க்குள் விடாமல் ஊர்மக்கள் சாலையில் அமர்ந்து தடுத்தனர். சிபிஎம், திமுக தலைவர்கள் அதிகாரிகளுடன் பேசி திருப்பி அனுப்பினர்.