சென்னை,நவ.17- நவம்பர் 28, 29 ஆகிய தேதி களில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். திமுக தொண்டர்க ளுக்கு அவர் எழுதிய கடிதத்தில். மக்கள் அளித்த உறுதியையும், அவர் கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசமடைந்ததுடன், மக்களுக் கான திட்டங்கள் சரியாகப் போய்ச்சேர வேண்டியதை இத்த கைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன். இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணி களையும், கழகத்தின் ஆக்கப் பணி களையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இடம் தேர்வு விழுப்புரம் மாவட்டம், வழுத ரெட்டி யில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு நவம்பர் மாதம் கடைசியில் வருகை புரிந்து அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கு வதற்கான விழா மேடை அமைப்ப தற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் சி.பழனி, அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித் துறை, கண்காணிப்பு பொறியாளர் பரிதி, செயற்பொறியாளர் செல்வக் குமார், வருவாய் கோட்டாட்சியர் முரு கேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.