சென்னை,ஜன.23- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு வியாழ னன்று காலை எண்ணூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் சந்தை, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் தண்டையார்பேட்டை பேருந்து நிலையம், ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூடம், துறைமுகம் சட்ட மன்றத் தொகுதியில் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் கட்டப்பட்டு வரும் 700 புதிய குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:- வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். வால்டாக்ஸ் சாலையில் 700 குடி யிருப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தும் வகை யில் அமையும். சிறுவாபுரி மற்றும் திருத்தணி கோவில் களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பாதை விரிவாக்க பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறி னார்.