districts

img

ஏரிகளில் உபரிநீர் திறப்பு: தனி தீவுகளாக மாறிய வடசென்னை பகுதிகள்

சென்னை, டிச. 14- பூண்டி மற்றும் புழல் ஏரியில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் செங்குன்றம், வடபெரும்பாக்கம், நாப்பாளையம், ஆண்டார்குப்பம், மணலி புதுநகர், மணலி எம்எம்எல், சடையங்குப்பம் வழியாக கொசஸ் தலை ஆற்றில் சேருகிறது. பின்னர் எண்ணூர் முகத்துவாரம் வழியாக வெள்ள நீர் கடலில் கலக்கும். இதன் காரணமாக சடையங்குப்பம் பகுதிக்கு செல்லக்கூடிய இரண்டு  வழிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள தால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு வசிக்க கூடிய மக்கள் சைக்கி ளிலும், நடந்தும் வேலைக்கு வெள்ள நீரை கடந்து செல்கின்றனர் சத்திய மூர்த்தி நகரில் இருந்து செல்லக் கூடிய சாலையையும், ஜோதி நகரில் இருந்து செல்லக்கூடிய சாலையை யும் காவல்துறையினர்  மூடி வைத்துள் ளனர். நீர் வரத்து அதிகரித்தால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். அத்தியா வசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணியாற்றில் வெள்ளியன்று (டிச. 13 ), 5600 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆண்டார்மடம் கிராமத்தில் இருந்து பழவேற்காடு செல்லும் சாலை அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பள்ளி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோர் சுமார் 10 கி.மீ சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள் ளது.