சென்னை,செப்.12- டெங்கு காய்ச்சல் பரவி வருவ தால் அதனை தடுக்க சென்னையில் பள்ளிகள்-ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு, பப்பாளி இலை சாறு வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மதுரவாயலில் ஒரு சிறுவன் உள்பட தமிழகம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர். 243 பேர் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். சென்னையில் டெங்குவை கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி ஆணை யர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுபுழு வளரிடங் களான, மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் மற்று முள்ள வைகள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசுபுழுக்கள் இருப்பின் அதனை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப் படும். தற்போது கொசு ஒழிப்பு பணிக் கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணி யாளர்கள் 2324 ஒப்பந்த பணி யாளர்கள் என மொத்தம் 3278 பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்கள், புதிய கட்டுமான பணிகள் நடை பெறும் இடங்களிலும் கொசுப்புழுக் கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட வேண்டும் எனவும், டெங்குகொசு உற்பத்தியாக கூடிய நன்னீர் தேங்கிய இடங்களிலும், டயர்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து பள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்களில் உள்ள தேவை யற்ற மழைநீர் தேங்கும் பொருட் களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டிடக் கட்டுமானங்கள் நடை பெறும் இடங்களிலும் கட்டிடக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருக் கின்ற இடங்களிலும், காலி மனை களிலும் தண்ணீர் தேங்கியிருந்து அதன் மூலம் டெங்கு கொசுபுழுக்கள் உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டால் தொடர்புடைய வர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதிக காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை இலவசமாக அளிக்க வேண்டும். இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோக மற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உரு வாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும், தண்ணீர் நிரப்பிய பூஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணி பிளான்ட் போன்ற வற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை யாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.