districts

img

ஆம்பூரில் புதிய மேம்பாலம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ஆம்பூர், டிச. 19 - ஆம்பூர் நகர தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைய உள்ள பகுதியை சனிக்கிழ மையன்று (டிச.18) பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதை தவிர்க்க சுமார் 1.400 கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழிச்சாலை கொண்ட மேம்பாலம் அமைக்கப்படும். இந்த மேம்பால பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. ரெட்டிதோப்பு பகுதி மக்கள் நகர பகுதிக்கு ரயில்வே சுரங்கப் பாதையை பயன்படுத்தி தான் வர வேண்டும்.  மழைக் காலங்களில் பாலத்தில் இடுப்பளவு தண்ணீர் நிற்பதால் அந்த பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் 650 மீட்டர் பாலம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி (ஜோர் பேட்டை), அ.செ.வில்வ நாதன் (ஆம்பூர்) உள்ளிட்டு அதிகாரிகள் உடனிருந்தனர்.