districts

img

புதிய பேருந்து நிலைய பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை, நவ.27- திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில்  சேவை சாலை (சர்வீஸ்) அகலப்படுத்துவது தொடர்பாக தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறி யாளருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை-திண்டிவனம் சாலை யில் உள்ள ரயில்வே கேட் அருகே திரு வண்ணாமலை பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு சின்ன கடைத் தெருவுக்கு மாற்றப்பட்டது. தற்போது மத்திய பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.  இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, வேலூர்,  காஞ்சிபுரம், திருச்சி, சேலம், மதுரை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பேருந்து கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரும் பேருந்துகள் மற்றும் வெளியே செல்லும் பேருந்துகளால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதால் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, மீண்டும் திரு வண்ணாமலை-திண்டிவனம் சாலை ரயில் நிலையம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது ரூ.30 கோடி மதிப்பில் புதிதாக நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தை தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிராஜ், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் உட்பட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  குறிப்பாக பேருந்து உள்ளே வரும் வழிகள், பேருந்து வெளியே செல்லும் வழிகள் மற்றும் சேவை சாலை அகலப்படுத்துதல் தொடர்பாகவும், பேருந்து நிலையம் அருகே உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.