திருவண்ணாமலை, பிப்.6- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாணாபுரம் ஊராட்சியில் ரூ.12 கோடியே 29 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது உரையாற்றிய அமைச்சர் வேலு,“ வாணாபுரம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, பள்ளிக்கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டி, பள்ளி நூலக கட்டிடம் என்று 86 பணிகள் ரூ. 8 கோடியே 46 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டுள் ளது”என்றார். தமிழ்நாடு அரசு முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சர வணன், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வரு வாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.