districts

img

கடலூரில் மினி மாரத்தான்

கடலூர், செப்.27- கடலூர் 30 மற்றும் நெய்தல் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு கடலூர்  மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கடலூர் வெள்ளி கடற்கரையில் (சில்வர் பீச்) மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் புத்தக திருவிழா வருகிற 29 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 9 ஆம் தேதி வரை நடை பெறுகிறது.  இதனை முன்னிட்டு நெய்தல் புத்தக திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமை தாங்கி கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.  கடலூர் நகர அரங்கில் தொடங்கி சில்வர் பீச் சென்றடைந்தது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலு வலர் ராஜசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட விளையாட்டு உள்ள சிவா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாந கராட்சி மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா,கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷினி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.