புலம்பெயரும் தொழிலாளர்கள் பிரச்சனை - புலம் பெயர்வோர் மசோதாவை சட்டமாக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி புதனன்று (டிச.20) சென்னையில் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.