districts

img

புதுவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ.25- வன்முறைகளுக்கு காரணமாண  ரெஸ்ட்ரோ பார்களின் அனுமதியை உடனடியாக ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுச்சேரியில் மதுபான கடைகளும், ரெஸ்டோபார்களும் வீதிக்கு வீதி உள்ள தால் வன்முறை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகிறது. எனவே, ஏற்கெனவே உள்ள மதுபான விடுதி கள், ரெஸ்ட்ரோ பார்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். புதிதாக  பார்களுக்கு அனுமதி வழங்கி யதை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முனியம்மாள், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தலைவர் தசரதா, தேசிய முற்போக்கு பெண்கள் கழகத் தலைவர் மல்லிகா ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத் தலைவர்கள் இளவரசி, அமுதா, விஜயா, உமா சாந்தி, சத்யா, சுமதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.