மார்க்சிய அறிஞர் தோழர் என்.ராமகிருஷ்ணன் படத்திறப்பு - நினைவேந்தல் கூட்டம் வெள்ளியன்று (டிச.17) சென்னையில் நடைபெற்றது. சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் உருவப்படத்தை திறந்து வைத்தார். ஃபிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், மூத்த வழக்கறிஞர் ‘சிகரம்’ ச.செந்தில்நாதன், மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு, சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), தீக்கதிர் பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.