சென்னை, செப். 14 - ஓட்டேரி திடீர் நகர் பகுதி மக்களுக்கு, அதே இடத்தில் அடுக்குமாடி வீடு கட்டும் பணியை விரைந்து தொடங்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கரிடம் புதனன்று (செப்.13) கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார்.அதில், 99வது வட்டம் பிரிக்ளின் சாலை யில் உள்ள ஓட்டேரி சுடு காட்டையொட்டி சுமார் 35 கிரவுண்ட் நிலத்தை 1949ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. இவ்விடத்தில் (திடீர் நகர்) தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் 1977ஆம் ஆண்டு, குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 98 குடும்பங்களுக்கு மனை களை ஒதுக்கியது. தற்போது அப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு அதே இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்ற வாரிய இயக்குநரிடம் இரண்டு முறை மனு அளித்தனர். இதனை வலியுறுத்தி கடந்த மார்ச் 31ந் தேதி மார்க்சி ஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப் பாட்டத்தை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரிட மும் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், ஏப்.28 அன்று, திடீர் நகர் பகுதியை குடி யிருப்பு நிலமாக வகை மாற்றம் செய்து, வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நில உரிமை மாற்றம் செய்ய தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. எனவே, காலம் தாழ்த்தா மல் திடீர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு களை கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண் டும் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது கட்சியின் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், பகுதிக்குழு உறுப்பினர் ஜி.புகழேந்தி, கிளைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.