தனித்து வாழும் பெண்ணுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா ஆகியோர் முயற்சியில் மத்திகிரியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரேகா, புனிதா, பிஎஸ்என்எல் சங்க கிளைச் செயலாளர் சீனிவாசன், தீக்கதிர் மாவட்ட நிருபர் ஒய்.சந்திரன், மனோகரன், சந்திரா குடும்பத்தினர் மணமக்கள் எம்.ரகுநாதன் - மஞ்சுளாவை உடனிருந்து வாழ்த்தினர்.