சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வெள்ளியன்று (டிச.27) மயிலாப்பூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஹேக் ஹத்தாத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.