கதர் வாரிய என்எம்ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக! அரசு ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை
சென்னை, அக். 21 - கதர்வாரிய என்எம்ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் குறளகம் பகுதி 13வது மாநாடு சனிக்கிழமையன்று (அக்.19) குறளகம் வளாகத்தில் நடைபெற்றது. கதர் வாரிய பணியாளர்களுக்கு ஓய்வு பணப்பலன்கள் 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும். எம்ஆர்பி செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பகுதி துணைத் தலைவர் ஞானசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சங்கத்தின் கொடியை வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கோபிநாதனும், அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் கொடியை மாவட்ட பொருளாளர் ஏழுமலையும் ஏற்றினர். பகுதி இணைச் செயலாளர் ஜெயேந்திரன் வரவேற்க, கண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பகுதி செய லாளர் முருகன் வேலை அறிக்கையும், நரேஷ் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். வடசென்னை மாவட்ட தலைவர் விஜயகுமரன், செயலாளர் ம.அந்தோணிசாமி உள்ளிட்ட தோழமைச் சங்கத் தலைவர்கள் பேசினர். இணைச் செயலாளர் சுப்புரத்தினம் நன்றி கூறினார். பகுதி தலைவராக ச.நரேஷ், செயலாளராக ச.முருகன், பொருளாளராக டி.ஜெயஸ்ரீ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகலாபம் எனக்கூறி ரூ.14 கோடி மோசடி: 6 பேர் கைது
சென்னை, அக். 21- ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் எனக்கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சென்னையைச் சேர்ந்த நபரை வாட்ஸ்-அப் மூலம் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு, Black Rock என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டே மாதத்தில் 500 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய வைத்துள்ளனர். இந்நிறுவனத்திற்கு செபி அனுமதி இருப்பதாகவும் கூறியுள்ளனர். BR IIFL PRo என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்ட கும்பலை நம்பி செயலியை பதி விறக்கம் செய்து முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணம் திரும்பி கிடைக்க வில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப் பட்டதை அறிந்து தேசிய சைபர் கிரைம் போர்டலில் புகார் அளித்தார். அதனடிப்படையில் மாநில சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மோசடி செய்யப்பட்ட பணம், வரவு வைக்கப்பட்ட 13 வங்கி கணக்குகள் உடனடி யாக முடக்கம் செய்யப்பட்டது. மோசடி மேலும் இது தொடர்பாக செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். சுப்பிரமணியன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த மதன், திருநின்ற வூரை சேர்ந்த சரவண பிரியன், ஆவடி சதீஷ்சிங், புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத், மதுரை மணிகண்டன் ஆகிய 5 சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
5000 மாணவர்களுக்கு 3டி அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் பயிலரங்கம்
சென்னை, அக். 21- 3டி அனிமேஷன் கேமிங் மற்றும் விஎப்எக்ஸ் பயிற்சியில் முன்னோடியான மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு கிரி யேட்டிவிட்டி (எம்ஏஏசி), அதன் மாணவர்க ளுக்காக வலைத்தளம் மூலம் நடத்தப்படும் ஒரு சிறப்பு பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அவர்களுக்கு கல்கி 2898 ஏடி தயாரிப்பில் ஒரு பிரத்தியேகமான மற்றும் நுணுக்கமான திரைக்கு அப்பால் நடக்கக் கூடிய பணிகளை விவரித்தது. இந்தியா முழுவதும் உள்ள எம்ஏஏசி இன் மையங்களி லிருந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையத்தின் மூலமாக இதில் கலந்து கொண்டனர். வளர்ந்து வரும் ஏவிஜிசி எனப் படும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக் தொழில்துறையில் வெற்றிகரமான தொழிலுக்கு மாணவர் களைத் தயார்படுத்துவதற்கான பயிற்சி யாக அமைந்தது. இது குறித்து பேசிய ஆப்டெக் லிமிடெட், நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சந்தீப் வெலிங் எம்ஏஏசி-யில், இளைஞர்களின் திறனை மேம்படுத்தல் மட்டுமின்றி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் ஒரு வெற்றிகரமான தொழிலுக்கு அவர்களை தயார்படுத்த இந்த பயிற்சி அளிக்கப்படு கிறது என்றார். மாணவர்களை சிறந்த தொழில் வல்லு நர்களுடன் இணைப்பதன் மூலம் திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நடப்புகள் பற்றிய நுண்ணறிவுகளை அவர்களுக்கு கிடைக்கச்செய்வதே எங்களது முயற்சியா கும்.” என்றார்.
கோங்கல்மேட்டில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்
திருவள்ளூர், அக். 21- கும்மிடிப்பூண்டியை அடுத்த கோங்கல் மேடு எஸ்.டி.காலனியில் மலைக்குறவன் மற்றும் இருளர் பழங்குடி மக்கள் 100 கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 30 ஆண்டு களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறனர். அன்றாடம் உணவிற்கே அல்லல்படும் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கூட இன்னும் கிடைக்கவில்லை. மயானபூமி இல்லாததால் பிரேதங்கள் சாலை ஓரங்களில் புதைத்து வருகின்றனர். இதற்கு ஊரில் உள்ள ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிப்ப தால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் அவ்வப்போது ஏற்படுகிறது. இத்த கைய நிலையை தவிர்க்கும் பொருட்டு கோங்கல்மேடு எஸ்.டி.காலனி மக்களுக்கு என நிரந்தரமான சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பேருந்து நிறுத்தும் பள்ளி,கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள், மூத்தக்குடிமக்கள் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கும், மருத்துவமனைக்கும் போக கோங்கல்மேடு வழியாக செல்லும் சென்னை-சத்தியவேடு பாதையை பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில் கோங்கல்மேட்டில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் நின்று செல்ல ஏதுவாக பேருந்து நிழற்குடை அமைத்து, பேருந்துகள் நின்று செல்ல அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பழங்குடி இன சான்றிதழ் பழங்குடி இன சான்றிதழ் இல்லாததால் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளனர். தங்களுக்கு பழங்குடி இன சான்றிதழ் வழங்க பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்த னர். மேலும் சுடுகாடு கேட்டு பொன்னேரி ஆர்.டி.ஒ, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி விஏஓ கோங்கல்மேட்டிற்கு வந்து சுடுகாட்டிற்கான இடத்தை தேர்வு செய்ய ஆய்வு மேற் கொண்டார். இந்த பிரச்சனைகளுக்கு விரை வில் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், கிளை தலைவர் ப.ரவி,மலைக்குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ரா.பத்தய்யா ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.
தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை
சென்னை, அக்.21- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக் கும் பொருட்கள் விழாக் காலங்களுக்கு ஏற்ற வகை யில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, வருகிற தீபா வளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண் பண்டங்கள் அடங்கிய ‘மதி தீபாவளி பரிசு பெட்டகம்’ தற்போது விற்பனை செய்யப்படுகிறது. வள்ளு வர் கோட்டம் பின்புறம் உள்ள அன்னை தெரசா வணிக வளாகத்தில் நடை பெறும் கண்காட்சியில் இது கிடைக்கும். இந்த பரிசு பெட்டகத் தில் சிவப்பு அரிசி, கம்பு, சோளம், ராகி, தினை, கருப்புக் கவுனி, கருப்பு உளுந்து, நரிப்பயிர், சாமை, ஆவாரம் பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டு வகை கள், சாமை முறுக்கு, தேங் காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் இடம் பெற்றுள்ளன. இத்துடன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப் புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பரிசு பொருட் களும் விற்பனை செய்யப் படுகின்றன. பொதுமக்கள் இவற்றை மொத்தமாகவோ அல்லது சிறிய அளவிலோ விரும்பும் வகையில் www.tncdw.org என்ற இணையதளம் மற்றும் 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மொத்த விற்பனைக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்காக மாமல்லபுரத்தில் தயாரான சிலை
சென்னை, அக்.21- ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின் அருகே விக்லோ என்ற நக ரில் விக்டர்ஸ் வே என்ற சிற்ப கலை பூங்கா உள்ளது. அந்த பூங்காவில், 16 -ம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்து மறைந்த அந்நாட்டு பண்டைய செல்டிக் கலாச் சார தத்துவஞானியும், மத குருவுமான ரூயிட் என்ப வரின் 20 அடி உயர பைபர் சிலை தற்போது நிறுவப்பட உள்ளது. இதற்காக பைபர் மெட்டீரியலில் இந்த சிலை மாமல்லபுரம் பொதுப்பணித் துறை சாலையில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில் உரு வாக்கப்பட்டுள்ளது. வலது கையில், பிரமிடில் உள்ள கழுகுடன் அமைந்துள்ள கோலை பிடித்து, இடது கையில் பாம்புகளை குவித்து, காலடியில் குள்ளநரியை நிறுத்திய தோற்றத்தில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 8 சிற்ப கலைஞர்கள் கடந்த ஒரு ஆண்டாக இந்த சிலையை வடிவமைத்துள்ள னர். அயர்லாந்து நாட்டுக்கு இந்த சிலை விரைவில் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சிறுநீரக செயலிழப்பால் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை
சென்னை,அக்.21- ரத்த நாள அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு நவீன முறையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு, சென்னை சிம்ஸ் மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். இதுதொடா்பாக, மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டா் முத்து வீரமணி கூறியதாவது: சிறுநீரக செயலிழப்புக்குள்ளான 49 வயது பெண் ஒருவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்ஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த நாள அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இத்தகைய சூழலில் அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியாது. ஏனெனில், தானமாகப் பெற்று பொருத்தப்படும் சிறுநீரகத்தின் ரத்த நாளங்களை, நோயாளியின் அடைப்பு உள்ள ரத்த நாளங்களுடன் இணைக்க முடியாது. இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு இதயத்திலிருந்து உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ‘அயோட்டா’ எனப்படும் பெருந்தமனியுடன் நேரடியாக, தான மாகப் பெறப்பட்ட சிறுநீரகத்தை இணைக்கத் திட்ட மிடப்பட்டது. அதன்படி, மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் குழுவினர், அந்தப் பெண்ணுக்கு நுட்ப மான சிறுநீரக மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். அதன் பயனாக அவா் தற்போது நலமுட னும், இயல்பாகவும் உள்ளதாகக் கூறினார்.
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
கடலூர், அக்.21 – கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்க ளன்று (அக்.21) மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் கொகை, மாற்றுதிறனாளி கள் உதவித்தொகை, பட்டா கோரும் மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்தனர். இலவச பட்டா, கலைஞர் மகளிர் உதவித்தொகை, ஆக்கிரமிப்பு, முதியோர் உதவித்தோகை, குழந்தை கள் உதவித்தொகை, இல வச வீடு, தையல் இயந்திரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக 578 மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக் குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். கழிப்பறை,வீடு உள்ளிட்ட அடிப்படை வசதி கள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண் டும். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார்துறை வேலை வாய்ப்புமுகாம்
ராணிப்பேட்டை, அக்.21- ராணிப்பேட்டை மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19ஆம் தேதி ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் 150 மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பத்தாயிரம் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட உள்ளதால் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்ய உள்ளனர். முகாமில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, நர்சிங், இன்ஜினியரிங், எம்.பி.ஏ படித்தவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலையினை தேர்வு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.