districts

img

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையில் மாற்றுத்திறனாளிகள் வேலை செய்து, 50 நாட்கள் ஆகியும் கூலி வழங்காததை கண்டித்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஸ்டேட் பாங்க் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பி.அய்யனார் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன், ஒன்றிய குழு பி.கலியமூர்த்தி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜி.ஜெயக்குமார், பொருளாளர் பி.உமா ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.