திருக்கழுகுன்றம், நவ.8- நடுவக்கரை கிராம மக்களுக்கு வழங்கிய நிபந்தனை நிலங்களை வேறு கிராம மக்களுக்கு வழங்குவதை கண்டித்து கிராம மக்கள் விவசாய சங்கத்துடன் இணைந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றம் வட்டம் நடுவக்கரை குன்னவாக்கம் கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளாக தலித் மக்கள் 300 குடும்பங் களாக வசித்து வருகின்றனர். பொருளாதாரரீதியாக பின்தங்கிய இம்மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் 4 பேர் வசித்து வருகின்ற னர் அனைவரும் கூட்டு குடும்பங்களாக வசித்து வருவதால் போதிய இட வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதில் 200 குடும்பங்களுக்கு இதுவரை யிலும் நிரந்தர பட்டா வழங்கப்படவில்லை. மேலும் கழிவறை கூட கட்ட வசதி இல்லாத இவர்க ளுக்கு தெருவிளக்கு, சாலை வசதி கூட இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடுவக்கரை கிராமத்தில் வசித்துவரும் தலித் மக்களுக்கு சர்வே எண் 103 ல் நிபந்தனை நிலம் சுமார் 22 ஏக்கர் வழங்கப்பட்டது. அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இவர்கள் விவசாயம் செய்தும் வீடு கட்டியும் வாழ்ந்து வந்தனர். பருவநிலை மாற்றம் கார ணமாகவும் வறட்சி மற்றும் பாசன வசதிகள் குறைந்து விட்ட காரணத்தால் அர சால் வழங்கப்பட்ட நிலத் தில் பயிர் செய்ய முடிய வில்லை. தற்போது இந்த இடத்தில் அரசு பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் மக்களுக்கு இடம் மற்றும் பட்டா வழங்கிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நடுவக்கரை குன்னவாக்கம் கிராம தலித் மக்களுக்கு இந்த இடத்தில் முன்னுரிமை அளித்து அரசு உடனடியாக வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.விஜயகாந்த் தலைமையில் புதன்னறு (நவ.8) உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை துவக்கி வைத்து சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாரா யணன் பேசினார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், வட்டத் தலைவர் எம்.குமார், சிபிஎம் திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் வாசுதேவன் பேசினார்.