districts

img

நிலுவைத் தொகையை கேட்டு உள்ளாட்சி ஊழியர்கள் முற்றுகை

திருவள்ளூர், ஜன. 21- தூய்மை பணியாளர், தூய்மை காவலர், டேங்க் ஆப்ரேட்டர்  ஆகியோருக்கு 7வது ஊதிய குழுவின்  86 மாத நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி,  திரு வள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி  அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஜன 21), முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர், அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் 500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட அரசு ஆணையாக,  7 வது ஊதிய குழு வின் நிலுவைத் தொகை இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த புதிய ஊதியத்தை வழங்க வேண்டும்,  கொரோனா காலத்தில் பணியாற்றிய வர்களில் காவல்துறையினர், மருத்து வர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு அரசு வழங்கியுள்ளது, தூய்மை பணி யாளர்களுக்கு மட்டும் வழங்காமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு சீருடை, பேட்டரி வண்டி, கையுறை, காலணி போன்ற பணிக்கருவிகள் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை பிரதி மாதம் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும், புதிய ஊதியம் வழங்க உத்தரவாதம், நிலுவைத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தையின் போது பிடிஒ குமார் உறுதியளித்தார். இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜெ.ஆனந்தன் தலைமை தாங்கி னார். சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் வி.குமார், மாவட்ட தலைவர் பி.கதிர்வேல், மாவட்ட செய லாளர் ஏ.ஜி.சந்தானம், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி, மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.குமரவேல், ஒன்றிய பொருளாளர் எஸ்.விஜியா, கவுரவத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.