பீமா சுகம் செயலியை அறிமுகம் செய்வதை கைவிட வலியுறுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் வேலூர் கோட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத் தலைவர் டி.அசோகன் தலைமையில் நடைபெற்ற முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய நடைமுறையை கொண்டு வரவேண்டும். பாலிசிதாரரை பாதிக்கும் பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பாலிசிகளுக்கான போனஸ் தொகையை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஏ.கலாம் உரையாற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.