புதுச்சேரி,மார்ச் 24- அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கத்தின் பாண்டிச்சேரி கோட்டசங்க 5வது மாநாடு புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன அரங்கத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு கோட்டச்சங்க தலைவர் ஆர்.முத்து தலைமை தாங்கினார். அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர்கள் சங்கத்தின அகில இந்திய பொதுச்செயலாளர் கே.ராகவேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக அரசால் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்கு ஏதுவாக ரயில் கட்டண சலுகை காலம் காலமாக இருந்தது. அந்த சலுகையை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. இந்த அரசால் அனைத்து பகுதி மக்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.எனவே நடைபெறும் பொதுத் தேர்தலில் இந்த அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயி லாக கேட்டுக் கொள்கிறேன் என்றார். முன்னதாக மாநாட்டு வேலை அறிக்கையை செயலாளர் கலியமூர்த்தி வாசித்தார். வரவு,செலவு அறிக்கையை ஆர்.தியாகராஜன் சமர்பித்தார். ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ்மாநில தலைவர் ஆர்.பழனிசாமி, உதவித்தலைவர் ஆர்.நடராஜன், புதுச்சேரி செயலாளர் ராமக்கிருஷ்ணன், உதவிசெயலாளர் குப்புசாமி,அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன்,சிஐடியு புதுச்சேரி உதவித் தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகள் கோட்டசங்க தலைவராக முத்து, செயலாளராக கலியமூர்த்தி, பொருளா ளராக தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். 8 வது ஊதிய குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது.