districts

சென்னை முக்கிய செய்திகள்

இளம் இதயங்களை காப்போம்: பிரச்சார இயக்கம் நிறைவு 

சென்னை: அக். 24- பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், “இளம் இதயங்களை காப்போம்” (‘Save Young Hearts’) 2023 டிஜிட்டல் பரப்புரை  செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது.   மாரடைப்புகள், இதய பிரச்சனைகள்,  வராமல் தடுக்க இளம் தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஓராண்டாக இந்த  பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதை யொட்டி சிறிய வீடியோ (Insta Reels) போட்டி நடத்தப்பட்டது.   இதில் மிகச் சிறப்பான முதல் இரண்டு படைப்புகளுக்கு தலா   ரு.1 லட்சம் மற்றும் ரு.50 ஆயிரம் ரொக்கப்பரிசினை நடிகர் விக்ரம் பிரபு வழங்கினார். சமீப காலங்களில், இளவயது நபர்கள் மத்தியில் “இதயம் தொடர்பான நோய்” (கார்டியாக் அரெஸ்ட்) அதிகம்  ஏற்படுவதால், அவற்றின் தீவிரத்தை உணர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்களின் கருத்துகளும், தெளிவாக விளக்கப்பட்டது. இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு இன்ஸ்ட்ராகிராம் தளத்தில் நடைபெற்ற இப்போட்டி, பலரது  கவனத்தை ஈர்த்தது என்று பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா  கூறினார்.முதுநிலை இதயவியல் நிபுணர் டாக்டர். கதிரேசன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

திருமுல்லைவாயலில் காவலர் தற்கொலை

சென்னை,அக்.24- திருமுல்லைவாயலில் உள்ள காவலர்  குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜார்ஜ் (வயது 29). இவர், ஆவடியில் உள்ள 5-வது      பட்டாலியனில் ஆயதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.  இவரது மனைவி பிரணா. இவர்களுக்கு 4வயதில் தன்வி என்ற பெண் குழந்தை  உள்ளது.  திங்களன்று இரவு ஜார்ஜ்  மதுபோதையில் இருந்ததாக கூறப்படு கிறது.அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஜார்ஜ்  படுக்கை அறைக்கு சென்றுவிட்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராத தால் சந்தேகம் அடைந்த பிரணா சென்று பார்த்தபோது கணவர் ஜார்ஜ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக ஜார்ஜை  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கள் ஏற்கெனவே ஜார்ஜ் இறந்து விட்டதாக  தெரிவித்தனர். இதுகுறித்து திருமுல்லை வாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

விழுப்புரம்,அக்.24- விழுப்புரம் மாவட் டத்தில் செஞ்சி அருகே கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக மாவட்ட தனிப்பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து, செஞ்சியை அடுத்த அப்பம் பட்டு  கவரை அருகே காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப் படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது கஞ்சா பொட்ட லங்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.  இந்த இருவரும், செஞ்சி வட்டம், கடகம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27), கவரை கிராமத்தைச் சேர்ந்த தருண் குமார்(20) என்பது தெரியவந்தது. இரண்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர், 410 கிராம் கஞ்சாவை பறி முதல் செய்தனர்.

ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை, அக். 24 -  ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (அக். 27) வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், மின்சார துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கள பிரச்சனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி கேட்டுக் கொண்டுள்ளார்.

பயிற்சியுடன் வேலைவாய்ப்பு:  ஆட்சியர்

ராணிப்பேட்டை,அக். 24 -  ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யின இளைஞர்களுக்கு சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனி யார் நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்  படவுள்ளது.  இந்த பயிற்சிக்காக தாட்கோ இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு மொத்த செலவும் தாட்கோ வழங்கும். இப்பயிற்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யின சார்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர் (பொது), 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இலகுரக மோட்டார் வாகன ஓட்டு நராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்ப வர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவி யாளராகவும், 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டு பாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ஆம் வகுப்பு படித்த வர்களுக்கு வாடிக்கை யாளர் பராமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சி கள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. வார்டுபாய் (ஆண் மற்றும் பெண் உதவி யாளர்), இலரக மோட்டார் வாகன ஓட்டுநர்,வீட்டு வேலை செய்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் (அழைப்பு மையம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.