விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ14 லட்சம் மதிப்பில் கோட்டகுப்பம் நகராட்சி, 18-வது வார்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் திறந்து வைத்தார். விழாவில் நகரமன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி, ஆணையாளர் புகேந்திரி, நகரமன்ற துணைத் தலைவர் ஜீனத்பீவி முபாரக், 18-வது வார்டு கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா, சிபிஎம் நகர செயலாளர் முகமது அனஸ், சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் அன்சாரி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.