districts

img

கண்டாச்சிபுரத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

விழுப்புரம், அக்.7- சிபிஎம் வட்ட மாநாட்டில் வட்ட தலைமையகமான கண்டாச்சி புர ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என கண்டாச்சிபுரம் வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாநாட்டிற்கு வட்டக்குழு உறுப்பினர்கள் டி.குப்பன், எம்.பழனி, எம்.பார்வதி ஆகியோர் தலைமை தாங்கினர். எம் .ராமலிங்கம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன்  மாநாட்டை தொடங்கி  வைத்து பேசினார். வேலை அறிக்கையை வட்டச் செயலாளர் எஸ்.கணபதியும்,வரவு-செலவு அறிக்கையை முருகன் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், எஸ்.வேல்மாறன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். என்.எஸ்.ராஜா  நன்றி கூறினார். தீர்மானம் கண்டாச்சிபுரம் தாலுகா தலைமையிடத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களை உடனே திறக்க வேண்டும், அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும், தென்பெண்ணை ஆற்றில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு இன தடுப்பணை கட்ட வேண்டும், வட்ட தலைநகரான கண்டாச்சிபுரத்தை ஊராட்சியில் இருந்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டக்குழுதேர்வு 15 பேர் கொண்ட கண்டாச்சிபுரம் வட்டக்குழுவின் செயலாளராக எஸ்.கணபதி தேர்வு செய்யப்பட்டார்.