கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புற நோயாளிகள் பிரிவில் அதிகளவில் புற நோயாளிகள் இருந்ததால் உடனடியாக மருத்துவர்கள் பணிக்கு திரும்பி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.