districts

img

தொழுநோயாளிகள் காப்பகத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு !

கள்ளக்குறிச்சி, செப்.8- உளுந்தூர்பேட்டை வட்டம், வெள்ளையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொழுநோயாளிகள் காப்பகம் மாவட்ட ஆட்சியர் தலைவர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம்,வெள்ளையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொழுநோயாளிகள் காப்பகத்தின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் செப். 7 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், “இந்த தொழுநோயாளிகள் காப்ப கத்தில் 36 நபர்கள் தங்க வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்க ளுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மாநில அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது”என்றார். தொழு நோயாளிகளுக்கு வழங்கப் படும் உணவு, குடிநீர்,மருத்துவ சிகிச்சை கள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தோம். அப்போது, தங்களுக்கு கூடு தலாக கட்டில் வசதி தேவைப்படுகிறது என்றனர். உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினேன் என்றும் ஆட்சியர் கூறினார். இந்த ஆய்வின்போது உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அனந்த ராம கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.