districts

img

அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துவேன்

சென்னை, ஏப். 14- வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி திருவிக  நகர் பகுதியில் ஞாயிறன்று (ஏப். 14)  வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள், பூக்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் உற்சாக மாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், நீண்ட நாள் பிரச்சனையான கணேச புரம் சுரங்கப் பாலத்தில் மழைக்காலங் களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்றுது வருகிறது. அந்த பணி விரைந்து முடிக்கப்படும். பழுதான குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டி கொடுக் கப்பட்டுள்ளது. பூங்காக்கள் சீரமைக் கப்பட்டுள்ளது. விளையாட்டு திடல் புது ப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக அங்கன் வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. கன்னிகா புரம் கால்பந்தாட்ட மைதானத்தை சீர மைக்கும் பணிகள் தொடங்கப்பட் டுள்ளது. சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. மழைக்காலங்களில் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புளியந் தோப்பு பகுதியில் இருந்து ஓட்டே ரிக்கு செல்லும் ஸ்டீபன்சன் சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதை யடுத்து முதல்வரின் உத்தரவின்பேரில் புதிதாக மேம்பாலம் கட்டி மக்கள் பயன் பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தொழிற்சாலைகளின் சமூக பாது காப்பு நிதி என 1 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கு பணிகள் செய்து கொடுத்துள்ளேன். என்னை மீண்டும் தேர்தெடுத்தால், மென்மேலும் இதுபோன்ற பணிகளை தொடருவேன் என்று கூறினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதிச் செயலாளர்கள் செ.தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், பகுதிச் செயலாளர் வி.செல்வ ராஜ், நிர்வாகிகள் கே.சுரேஷ், என்.மோகன், அசோக், எஸ்.இருதயராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு உள்ளிட்ட கூட்டணி கட்சி யினர் கலந்து கொண்டனர்.