கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிள்ளை பேரூர் திமுக சார்பில் கிள்ளை எம்ஜிஆர் நகர் ரைசிங் சன் கபடி குழு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் திமுக. கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன் தொடங்கி வைத்தார். 3 நாள் நடைபெற்ற இந்த போட்டியில் 48 அணிகள் கலந்து கொண்டன. இறுதி சுற்றில் வெற்றி பெற்ற எம்ஜிஆர் நகர் ரைசிங்சன் கபடி குழுவிற்கு 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையை திமுக கடலூர் மாவட்ட பொருளாளர் கதிரவன் வழங்கினார். கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாண்டியன், மதுரைசெல்வி, செந்தில் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.