districts

img

பாஜகவின் சதி திட்டங்களை ‘இந்தியா’ வீழ்த்தும்

சென்னை, செப். 7 - பாஜகவின் சதித் திட்டங்களை ‘இந்தியா’ அணி வீழ்த்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். குலத்தொழிலை ஊக்கு விக்கும் ஒன்றிய அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை கண்டித்து புத  னன்று (செப்.6) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த  போராட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் பேசிய  தன் சுருக்கம் வருமாறு: 2024 தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாது என்று பாஜக கருதுகிறது. எனவே, தேர்தலுக்கு முன்பாக தனது அனைத்து திட்டங்களையும் நி றை வேற்ற பாஜக துடியாய் துடிக்கிறது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றவும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் அதிபர் ஆட்சி முறையை அம ல்படுத்தவும் முயற்சிக் கிறது. அரசியலமைப்பு சாசனத்திற்கு மாற்றாக மநுஸ்மிருதி ஆட்சியை கொண்டு வர முயற்சிக் கின்றனர். இதன் ஒருபகுதி யாக விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமுஎகச நடத்திய சனா தன ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை ஆதரித்தா பேச முடியும். அந்த மாநாட்டை நடத்திய தமுஎகச மீது வழக்கு தொடுக்காமல், அமைச்சர் உதயநிதியை குறி வைத்து வழக்கு போடுகின்றனர். ‘இந்தியா’ அணியின் நடு நாயகமாக திமுக உள்ள  தால், திமுக மீது களங் கத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டு செயல்படு கிறது. சட்டத்தின் முன் அனை வரும் சமம். சாதி, மதம், இனம், மொழி அடிப்படை யில் பாகுபடுத்துவது குற்றம் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

அதன் பேரில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சர்கள், அரசிய லமைப்பு சாசனத்தை கொச்சைப்படுத்துகின்றனர். உதயநிதி பேச்சை திரித்து, பெரும்பான்மை மக்களி டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து அமைப்பு களுக்கும் ஒரே தேர்தல் என்பது எப்படி சரியாக இருக்கும். ஒரேநாடு; மொழி; தேர்தல்; ஒரே தலைவர் மோடி என்று அறிவிக்க முயற்சிக்கின்றனர். இந்த ஆட்சிக்கு மாற்றாக உரு வாகி உள்ள ‘இந்தியா’  அணியில் குழப்பத்தை உரு வாக்க முயற்சிக்கின்றனர். பாஜகவை எதிர்த்து ‘இந்தியா’வே திரண்டு கொண்டு இருக்கிறது. ராஜாராம் மோகன்ராய், ஜோதிபாய் புலே, அம்பேத்கர், நாராயணகுரு, அய்யன்காளி, பெரியார் என ஒவ்வொரு மாநிலத்திலும் முற்போக்குவாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் உரு வாகினர். சனாதனம் தோன்றிய காலத்திலிருந்து அதனை எதிர்த்த கருத்துப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. அதனடிப்படையில் காஷ்மீர் முதல் தமிழகம் வரை உள்ள கட்சி கள் இணைந்து‘இந்தியா’ அணியாக உருவெடுத்துள் ளது. இந்த அணி பாஜக-வின் அனைத்து சதித் திட்டங் களையும் தடுக்கும். குலக் கல்வி திட்டத்திற்கு சாவு மணி அடித்தது போல், விஸ்வ கர்மா திட்டத்திற்கு காரணமான பாஜகவின் ஆணி வேரை அறுத்து எறி வோம். இவ்வாறு அவர் பேசி னார்.