சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர், பிப் 10- கும்மிடிப்பூண்டியை அடுத்த நரசிங்க புரம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 25 மாண வர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் திங்களன்று (பிப் 10), மதியம் உணவு இடைவேளையின் போது மாணவிகளுக்கு முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த உணவை உட்கொண்ட 6 மாணவிகளுக்கு சம்பவ இடத்திலேயே ஒருவர் ஒருவராக மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட ஆசிரியர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த மற்ற மாணவர்களை உணவு அருந்த வேண்டாம் என தடை செய்ததுடன், உடனடியாக அந்த உணவை குப்பையில் கொட்டியுள்ளனர். மேலும் பாதிப்புக்குள்ளான யஷ்வந்த், சுமன், சபரி வாசன், சாரதி, காவியா, யுதிகா, யுவராஜ் ஆகிய மாணவர்களுக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் நேரடியாக வந்து பார்வையிட்டதுடன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார். தற்போது மாண வர்களின் உடல்நிலை சீராக உள்ள தாக மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மலையடிக்குப்பத்தில் விவசாயிகளை வெளியேற்ற மேலும் 2வாரம் தடை
கடலூர், பிப்.10 - கடலூர் மாவட்டம், மலையடிகுப்பம் கிராமத்தைச் சார்ந்த 22 விவசாயிகள் மீது தமிழ்நாடு ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் எதையும் பொருட்படுத்தா மல் காவல்துறை துணையோடு விவசாய நிலங்களை அழிக்க வருவாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் முடி வெடுக்கும் வரை, நிலத்தினை அழிக்கவோ அல்லது தங்களை வெளியேற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாதென உத்தரவிடக் கோரி இந்திரா உள்ளிட்ட 22 பேர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சுந்தர் மற்றும் கலைமதி முன்பு விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் 2 வாரத்திற்குள் முறையாக மேல் முறையீட்டு மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதுவரை விவசாயிகளை வெளியேற்ற தடை விதித்தும், ஆட்சியர் எடுக்கும் நட வடிக்கை முடிவினை முறையாக விவ சாயிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒரு வேளை விவசாயிகளுக்கு எதிராக மாவட்ட ஆட்சி யர் முடிவெடுக்கும் பட்சத்தில் 10 நாட்க ளுக்கு தடை நீடிக்கும் எனவும், அதற்குள், விவசாயிகள் ஆட்சியர் உத்தரவினை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என உத்தர விட்டனர். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜரானார். உயர்நீதிமன்ற தடை உத்தரவை சிபிஎம் வரவேற்றுள்ளது.
மனு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி முதியோர் அவதி
ராணிப்பேட்டை,பிப்.10– ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் பெறும் இடத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கின்றனர். இந்நிலையில் திங்களன்று (பிப். 10) மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தார். அவ ருக்கு உதவிக்கு ஆள் இல்லாததால் அங்கிருந்த வட்டாட்சியர் காமாட்சி, பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவினார் கள். மனு கொடுக்க வரும் மாற்றுத் திறனாளிகளுக்கும் முத்த குடிமக்களுக்கும் உதவி செய்ய தற்காலிக பணியாளர்களை அமர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்கேட்டு சாலை மறியல்
கிருஷ்ணகிரி, பிப்.10 - போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூர் அருகே இந்திரா நகர் காலனியில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த ஆழ் துளை கிணற்று நீர் குடிப்பதற்கு லாயக்கற்று உவர்ப்பாக மாறி உள்ளதால் பாது காக்கப்பட்ட தண்ணீர் வழங்கக்கோரி பண்ணந் தூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
விடுதி மாணவி தற்கொலை சம்பவம் முழு விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
கடலூர், பிப்.10- விடுதியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துள்ளது. இது குறித்து சிபிஎம் மாவட்ட செய லாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம், பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த விழுப்புரம் மாவட்டம் சீனிவாச நகரை சார்ந்த 9ஆம் வகுப்பு மாணவி கோவஸ்ரீ கடந்த 07.02.2025 அன்று மர்மமான முறை யில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இறப்பிற்கான காரணத்தை பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தெரி வித்ததாகவும், ஏற்கெனவே பள்ளி நிர்வாகம் மற்றும் சக மாணவிகளின் நட வடிக்கைகளினால் தனது மகள் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் ஆகவே தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தனர். மேலும் மாணவி நிர்வாகத்திடம் விடுதியின் கட்டமைப்பு மற்றும் உணவு சரி இல்லை என்று விடுதி வார்டனிடம் வாய்மொழியாக பலமுறை புகார் கூறியுள்ளதாகவும் தெரிகிறது. ஆகவே மாணவி கோவஸ்ரீ மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் ஆய்வின்போது பிரேத பரிசோதனை ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர் குழு வீடியோ பதிவு செய்ய வேண்டும். மாணவியின் உடலை பார்வையிட குடும்பத்தினருக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். சம்பவத்தன்று பணியிலிருந்த விடுதி காப்பாளர் உள்ளிட்டோரை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு இருப்பிடம் மற்றும் பாதுகாப்பினை உத்தர வாதப்படுத்த மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் சிபிஎம் கடலூர் மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்து ஒருவர் பலி
கடலூர், பிப்.10 - பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்த இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் - வடலூர் சாலையில் குறிஞ்சிப்பாடி அருகே கேசவன்நாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 3 பேர், மற்றும் 2 இளைஞர்கள் உட்பட 5 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது விருதாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு டிராக்டரை முந்த முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 5பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுந்தர் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த நால்வரை அப்பகுதி மக்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக் மேற்கொண்டு வருகின்றனர்.