districts

img

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ்போட்டி ஏற்பாடுகளை முதலமைச்சர் இன்று ஆய்வு

மாமல்லபுரம், ஜூலை 11- மாமல்லபுரத்தில் 44-வது “சர்வதேச செஸ் ஒலிம்பியாட்” போட்டி வரு கிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து 2,500 விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் மாமல்ல புரத்துக்கு வருகை தர உள்ளனர். இதையொட்டி பூஞ்சேரியில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக ஒரு  அரங்கம், 8 ஏக்கர் நிலப்பரப் பில் வாகன நிறுத்தும் இடம்  அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. அனைத்து  பணிகளும் முடியும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் செஸ் ஒலிம்பி யாட் போட்டி நடக்கும் அரங்கம், பாதுகாப்பு, கார்  நிறுத்தம், சாலை வசதி, போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமை செயலர் இறையன்பு ஆய்வுகள் மேற்கொண்டார். புதிய அரங்கம் அமைக்கும் பணிகள் இன்னும் முடியாத தால், காவல்துறை கட்டுப் பாட்டில் போட்டி நடை பெறும் “போர் பாயின்ட்ஸ்”  அரங்கத்தை ஒப்படைப் பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி விரைவாக பணிகளை முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் செய்யப் பட்டுள்ள ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் செவ்வாயன்று (ஜூலை 12) பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அவர் போட்டி நடைபெறும் அரங் கம் மற்றும் வளாகத்தை பார்வையிட உள்ளார். மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடிக் கும் வகையில் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

;