districts

img

இருளர் இனமக்களுக்கு அரசு நிலத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தல்

திருவள்ளூர், நவ 5- தனியார் நிறுவனம் ஆக்கிர மித்துள்ள அரசு நிலத்தை கையகப்படுத்தி கள்ளுக்கடைமேடு, ராஜரத்தினம் நகரில் உள்ள இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பழ வேற்காடு ஊராட்சியில் கள்ளுக்கடை மேட்டில் 40 குடும்பங்களும், ராஜா நகரில்  54 குடும்பங்கள் என   அப்பகுதி யில் பல தலைமுறைகளாக இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்  பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களது குடும்பத்திற்கும் என தனித்தனியாக  வீடுகள் இல்லாத தால்,  20 வீடுகளில் 40 குடும்பங்  கள் வாழும் மோசமான நிலை யில் உள்ளது. இலவச வீட்டு மனை மற்றும் பட்டாக்களை அனை வருக்கும் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வரு கின்றனர். அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். எனினும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் வருவாய்த்துறையினர் எடுக்க வில்லை.  சுனாமிக்கு பிறகு நீடித்த நிலைத்த வாழ்வாதார திட்டத்தின் மூலம் பழவேற்காடு ஊராட்சிக்கு மட்டும் 586 வீடுகள் வந்துள்ளன. இதில் நான்கு வீடுகள் மட்டும் இருளர் இன மக்களுக்கு கொடுத்துள்ளனர். மற்றதை  எல்லாம் வசதி படைத்தவர்களுக்கும் அதி காரத்தில் உள்ளவர்களின் வேண்டப் பட்டவர்களுக்கும்  கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடலோரம் மீனவ மக்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்தாலும்,  சொந்தமாக ஒரு குடிசை கூட இல்லாமல் சாலையோரங்களில் குடும்பம் நடத்தும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மழைக் காலத்தில், பெருவெள்ளம், புயல் காற்று கரையை கடக்கும் பொழுதெல்லாம்  சமுதாய கூடங்கள், பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைகின்றனர். மழை வெள்ளத்தில் ஆடு, மாடு, கோழி ஆகிய வற்றை விட்டு, விட்டு முகாம்களில் தங்கி பிறகு புது வாழ்க்கையை தொடர்வது, என காலம் காலமாக நடந்து வருகிறது.  இவர்களை  அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இருளர் இன மக்கள் வாழ்விடங்க ளில் சுகாதாரமான வாழ்க்கை நடத்த  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கா மல், மழைக் காலத்தில் மட்டும் அதிகபட்சமாக பிளிச்சிங் பவுடர் தெளிப்பதோடு சரி, சொந்த வீடு இல்லாததால் கழிவறை என்ற பேச்சுக்கே இடமில்லை. சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பல்வேறு மர்ம நோய்களால் பாதிக்கப்பட்டு மரணங்கள் ஏற்படு கிறது.

இது முடிவில்லாத தொடர் கதையாகவும் உள்ளது. இந்த நிலையில் நவ1 அன்று கள்ளுக்கடை மேடு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இம்மக்கள் குடிசைகள் அமைத்துள்ள னர். உடனடியாக காவல்துறையினர் குடிசைகளை அகற்றியுள்ளனர். தனியார் நிறுவன ஆக்கிரமிப்பை மட்டும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, திருவள்ளூர் மாவட்ட மீன் பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.நித்தி யானந்தம் ஆகியோர் இது குறித்து தெரி விக்கையில்,  வடகிழக்கு பருவ மழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கடலோரம் உள்ள இருளர் இன மக்களை அகற்றுவதை விட்டு,  விட்டு, அந்த மக்கள் குடியிருப்புக்கு அருகில் பயனற்று கிடக்கும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை கையகப்படுத்தி, வீட்டுமனை இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கு தலா 5 சென்ட் நிலத்தை வழங்க வேண்டும்.அதற்கான பட்டாக்களையும் வழங்க வேண்டும். இது தான் நிரந்தர தீர்வாக அமையும். இதில்  நடவடிக்கை எடுக்க பொன்னேரி கோட்டாட்சியர் காலதாமதம் செய்து வருகிறார். அரசும், அதிகாரிகளும் வசதிபடைத்தவர்களுக்காக செயல்படும் போக்கை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் நலனையும் பாதுகாக்கவேண்டும் என்றனர்.                                                                                                                                         -பெ.ரூபன்