கிருஷ்ணகிரி,டிச.3- அனைத்து அரசுத் துறைகளின் ஓய்வூதி யர்கள் மாவட்ட குறைதீர்க்கும் கூட்டம் ஒப்புக்கு நடத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெரும்பாலானவர்களிடம் குறைகள் கேட்டறியப்படவில்லை, மேலும் குறை களை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஓய்வூதியர்கள் கூறியுள்ளனர். இது குறித்து ஓய்வூதியர் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் துரை தலைமையில் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதி களை நிறைவேற்ற,புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், 70 வயது முடிந்தவர்களுக்கு 10விழுக்காடு ஓய்வூதியம் உயர்வு அளிக்கவேண்டும், பட்டு வளர்ச்சித்துறையில் தினக் கூலி, சத்துணவு,அங்கன்வாடி, வன காவலர்கள்,வருவாய் கிராம உதவியாளர்க ளுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ7800 வழங்க வேண்டும், காசில்லா மருத்துவ காப்பீடு அமல்படுத்தவலியுறுத்தி ஓய்வூதி யர்கள் வட்ட தலைநகரங்களில் கண்களில் கருப்பு துணி கட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திடவும் 17ஆம் தேதி ஓய்வூதியர் தினவிழா கொண்டாடு வது எனவும், மாவட்ட நிர்வாகம் ஓய்வூதி யர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை கட்டாயம் மீண்டும் நடத்தி சரியாகவும் முழுமையாகவும் குறைகளை கேட்டு அறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வலி யுறுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிறைவாக துணைத் தலைவர் சரவணபவன் நன்றி கூறினார்.