சென்னை, டிச. 30 - சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜன.1 முதல் அமலுக்கு வருகி றது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வருகின்ற 2022 ஜனவரி மாதம் முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை ) வழக்கம்போல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப் படும். நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் காலை 7மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.