districts

img

அசோக்லேலண்டு தேர்தலில் சிஐடியு-குசேலர் அணி வெற்றி

சென்னை, ஜூலை 30-

      திருவொற்றியூர் அசோக்லேலண்டு நிறுவனத்தில் வைப்பு நிதி அறம் காவலர்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற்றது.

      இந்த தேர்தலில் உழைப்போர் உரிமைக் கழகம் (சிஐடியு), உழைக்கும் மக்கள் மாமன்றம் இணைந்து போட்டியிட்டது. இவர்களுக்கு எதிராக மைக்கேல் அணி போட்டியிட்டது. இதில் சிஐடியு கி.சுரேஷ், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் ஆர்.தினகரன், எஸ்.ராஜேந்திரன், ஏ.முகமது சாஜித் உசேன் ஆகியோர் அமோக வெற்றி பெற்றனர்.