தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் அய்யம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று, பள்ளி வளாகத்தினை பார்வையிட்டார்.