சென்னை,ஜன.25- இளையராஜாவின் மகள் பவதாரணி வியாழக்கிழமை (ஜன.25) மாலை மறைந்தார்.அவர் புற்றுநோயால் பாதி க்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார். அவருக்கு வயது 47. 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை பலனின்றி வியாழனன்று மாலை 5:20 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். வெள்ளிக்கி ழமை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும். பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு என்ற பாடலை பாடியதால் பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னணி பாடியதோடு மட்டும ல்லாமல் 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.