புதுச்சேரி, ஏப்.10- மோடியின் புளுகு மூட்டைகளை சுமந்து வரும் ரங்கசாமியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.முருகன் பேசினார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்கு கேட்டு முத்தியால்பேட்டையில் நகர கமிட்டி செயலாளர் எம்.பி. மதிவாணன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் தா.முருகன் பேசுகையில், பத்தாண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் மோடியின் பாஜக அரசு, புதுச்சேரிக்கு என்ன திட்டங்களை வழங்கியது என்று முதல்வர் ரங்கசாமி பட்டியலிட முடியுமா? பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் ரேசன் கடைகளை கூட திறப்பதற்கு முன்வராத ரங்கசாமி, எந்த முகத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வருகிறார். எனவே மோடியின் புளுகு மூட்டை களை சுமந்து வரும் ரங்கசாமியையும், நமச்சிவாயத்தையும் புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், சீனிவாசன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக் குழு உறுப்பினர்கள் பிரேமதா சன், சரவணன், தாட்சாயணி, சஞ்சய், காங்கி ரஸ் கட்சியின் தொகுதி செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முத்தியால்பேட்டையில் துவங்கிய பிரச்சாரம் காந்தி வீதி, நேரு வீதி, சின்ன மணிகூண்டு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற புதுவை சப்தர் ஹஸ்மி கலைக் குழுவின் அரசியல் நையாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.