ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஐசிஎப் சாதனை
சென்னை, மார்ச் 17- ரயில் பெட்டிகள் தயாரிப் பில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) புதிய சாதனை படைத்துள் ளது. இந்த உற்பத்தி ஆண்டில் (2023-24) அதிக எண்ணிக் கையிலான (ஆயிரமாவது) தானியங்கி ரயில் பெட்டியை ஐசிஎப் தயாரித்துள்ளது. வந்தே பாரத் ரயில்களுக் கான ரயில் பெட்டிகள் மற்றும் மின் தொடர் வண்டி களுக்கான ரயில் பெட்டிகள், நெடுந்தொலைவு மின் தொடர் வண்டிகளுக்கான ரயில் பெட்டிகள், தானி யங்கி ஆய்வு ரயில் பெட்டி கள், போன்றவை இந்த வகை ரயில் பெட்டிகளில் அடங்கும்.இந்த சாத னையை புரிந்ததற்காக ஐசிஎப் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஐசிஎப் பொது மேலாளர் யு.சுப்பா ராவ் வாழ்த்து தெரிவித் தார்.
திருவள்ளூர் நகராட்சி மன்ற தலைவர் அறைக்கு சீல்வைப்பு
திருவள்ளூர், மார்ச் 17- தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சித் தலைவர்கள் படங்கள், விளம்பரங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். அரசியல் கட்சியினர் தங்களது கட்சிக் கொடிகள், சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றை தாங்களாக முன்வந்து மூட வேண்டும். இல்லையென்றால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு தேவைக்காக பணத்தை கொண்டு சென்றாலும் அதற்கான ஆவணங்கள் இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். நாடாளுமன்றத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர மன்ற தலைவர் அறை மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல் அரசின் சாதனைகள் குறித்த தகவல்களை பேப்பர் ஒட்டி மறைத்தனர். மேலும் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் வைத்திருந்த தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் பெட்டி
திருவள்ளூர், மார்ச் 17- அவசர கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் போட்டுச்செல்லுமாறு பொதுமக் களுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமல்படுத்தப் பட்டுள்ளதால் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள், பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் இட்டுச் செல்லுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காலமானார்
சென்னை, மார்ச் 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வி.பி.நகர் கிளைச் செயலாளர் மு.முத்துக்குமார் தாயார் தனலட்சுமி (69) ஞாயிறன்று (மார்ச் 17) காலமானார். அவரது உடலுக்கு வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, செல்வகுமாரி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக் குழு உறுப்பினர்கள் அருமைராஜ், ஸ்டாலின், அன்பு, வெங்கடைய்யா உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி திங்கட்கிழமை (மார்ச் 18) காலை 10 மணியளவில் எர்ணாவூரில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கிளீனர் கைது
சென்னை, மார்ச் 17- 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்தின் கிளீனரை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்தனர். சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் பள்ளி பேருந்தில் 9 வயது சிறுமி சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்தில் கிளீனராக வேலை செய்து வருபவர் ஞானசேகர். அவர் சம்பவத்தன்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து கிளீனர் ஞானசேகர் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க கள்ளக்குறிச்சியில் பறக்கும் படை
கள்ளக்குறிச்சி, மார்ச் 17- கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பறக்கும் படையை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஞாயி றன்று (மார்ச் 17) கொடியசைத்து துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கரா புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகளில் தேர்தல் விதிமீறல் கள் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், உரிய ஆவணங் களின்றி கொண்டு செல்லும் ரூ.50 ஆயிரத் துக்கு மேற்பட்ட ரொக்கம்.ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக் கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் 3 கட்டங்களாக சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகள் ஈடுபடும் வகையில் 40 பறக்குப் படை குழுக்கள், 40 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களால் நடத்தப்படும் கூட்டங்கள், பிரச்சாரங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஏற்படும் செலவினத் தொகையை மதிப்பிட வீடியோ, தொகுதிக்கு 1 வீதம் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத் திடும் பொருட்டு 28 வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்(ம) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (தேர்தல்) சங்கர், தனி வட்டாட்சியர் (தேர்தல்) பசுபதி மற்றும் அரசு அலுவலர் கள் உடனிருந்தனர்.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை, மார்ச் 17- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் வருகிற 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழ கத்தில் ஓரிரு இடங்களி லும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளிலும் லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்களன்று தமிழகத் தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்ப டும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சட்டவிரோத கருக்கலைப்பு குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
கடலூர், மார்ச் 17- சட்டவிரோத கருக் கலைப்பில் ஈடுபட்டதாக கழுதூரை சேர்ந்த ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 31.01.2024 அன்று கழுதூர் கிராமத்தில் ஓம்சக்தி மெடிக்கல் மருத்துவமனை யில் சட்டவிரோதமாக மருத்துவம் மற்றும் கரு கலைப்பு செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கருக்கலைப்பு மாத்திரைகள், மற்றும் உபகரணங்கள், ஸ்கேனிங் இயந்திரம், ஊசி போன்ற உபகரணங்கள் மருத்துவ மனையில் கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து கருக்கலைப்பு செய்ய நபர்களை அழைத்துவர பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக வேப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இது தொடர்பாக மணி வண்ணன் (வயது 34), தினேஷ் (வயது 22), கண்ண தாசன் (வயது 29) கௌதமி (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இவர்களை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டதின் பேரில் மணிவண்ணன் குண்டர் தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுவையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
அறை திறப்பு புதுச்சேரி, மார்ச் 17- நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை யில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார் களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் தொடர் பான புகார்களை அளிப்ப தற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1950 மற்றும் சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி பி.ஜவகர், மாவட்ட தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரி பி.தில்லைவேல் ஆகியோர் ஞாயிறன்று (மார்ச் 17) நேரில் சென்று பார்வையிட்ட னர்.
ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை
சென்னை, மார்ச் 17- ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 அன்று தொடங்குகிறது. துவக்க ஆட்டம் (சென்னை - பெங்களூரு) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை திங்களன்று தொடங்குகிறது.