districts

img

மாமல்லபுரத்தில் கடும் கடல் சீற்றம்

மாமல்லபுரம், டிச. 9- வங்கக் கடலில் உருவாகி உள்ள “மாண்டஸ்” புயல் காரணமாக வெள்ளிக் கிழமை காலை முதல் மாமல்லபுரம் பகுதி யில் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கடும் இரைச்சலுடன் அலைகள் சுமார் 40 அடி உயரத்துக்கு எழுந்தன. கடற்கரை கோயில் தென் பகுதியில் உள்ள திறந்தவெளி கடைகள் வரை கடல் நீர் புகுந்து கடைகளை கடலுக்குள் இழுத்து சென்றது. கரையோரத்தில் நிறுத்தப்பட்ட படகுகளையும் கடலுக்குள் இழுத்துச் சென்றன. மீனவர்கள் தங்களது படகு களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக மேடான பகுதியில் நிறுத்தி கட்டி வைத்து உள்ளனர். இருப்பினும் சில படகுகள் சேதமடைந்தன. மழையால் மாமல்லபுரம் கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.

;