சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்க ளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டு கள் வழங்க வேண்டும் என அதிகாரி களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் பல இடங்க ளில் வெயில் சதமடித்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தி லிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலை யில் பொதுமக்கள் மிகவும் அவதிப் படுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது சுகா தாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரி யாக பொதுமக்களுக்கான மறு நீரேற்று மையங்களை அமைக்க வேண்டும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த பொது மக்களுக்கு மாவட்டம் தோறும் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரி களுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.