districts

img

முதியோர் நலனை வலியுறுத்தி வாக்கத்தான்

சென்னை,செப்.3- முதியோர் நலனை வலியுறுத்தி சென்னை யில் வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது. முதியோர்  பராமரிப்பில் முன்னணியில் உள்ள அதுல்யா சீனியர் கேர், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் இதனை நடத்தி யது.  “முதியோரை கனிவுடன் பராமரித்தல்”   என்ற பெயரில் இந்த வாக்கத்தான் நடை பெற்றது. மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்திய இந்நிகழ்வில் 400-க்கும் அதிகமான நபர்கள்  மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். தன்னார் வலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள்,  கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரை யும் ஒருங்கிணைத்து இது நடத்தப்பட்டது. இந்நிகழ்வு, மூத்த குடிமக்கள் குறித்து பொது மக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று அதுல்யா சீனியர் கேர்-ன் நிறுவன ரும் & நிர்வாக இயக்குநருமான டாக்டர். கார்த்திக் நாராயண் கூறினார். இந்த உன்னத நோக்கத்திற்கான பங்கேற் பாளர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதத்தில் ஒரு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.