வேலூர், செப்.28 – வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 15-வது ஆண்டாக அறிவுசார் தொழில் நுட்பத் திருவிழா (கிராவிடாஸ் 2024) துவக்க விழாவுக்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 625 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 25 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ரோபோக்கள், கார்கள், பேட்டரி வாகனங்கள், சிறிய ரக விமானங்கள், ஆகிய வைகளும் 200-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பு களும் காட்சிப்படுத்தப்பட்டன. அறிவியல் சார்ந்த விவாதங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றது.விழாவை துவக்கி வைத்து பேசிய விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், ஒவ்வொரு நாடும் கல்விக்காகவும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காகவும் அதிக செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஆராய்ச்சி மற்றும் வெளியீடு காப்புரிமைகள் சாத்தியமாகும் என்றார் 2020 இல் இந்தியாவில் 56,000 காப்புரிமைகள் மட்டுமே பதிவு செய்யப் பட்டன. இது சீனாவில் காப்புரிமை பதிவு செய்யப்பட்டதில் வெறும் 4 விழுக்காடு மட்டுமே என்றும் அவர் கூறினார். ஆராய்ச்சித் துறையில் அரசு பங்களிப்புடன் தனியார் பங்களிப்பு மிக அவசியம். சீனா மற்றும் அமெரிக்காவில் அராய்ச்சிக்காக அதிக நிதி செலவிடப் படுகிறது. நமது நாட்டில் மிகமிகக்குறைவாக செலவழிக்கப்படுகிறது. அவர்களோடு போட்டியிடும் வகையில் நமது நாட்டில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சிறப்பு விருந்தினராக டேனியலி இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மனோரஞ் சன் ராம் பங்கேற்று பேசுகையில்,கடந்த 30 ஆண்டுகளை காட்டிலும் நாடு இரும்பு உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக ஆட்டோ டெஸ்க் நிறுவன (கல்வித்துறை ) மேலாளர் ஆனந்த் புஜாரி, விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் ஜி.வி. செல்வம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் டாக்டர்.பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளை அனைவரும் பார்வையிட்டனர்.மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஞாயிறன்று (செப்.29) நிறைவுபெறுகிறது.