சென்னை, ஜன. 12- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. மாநாடு சிறப்பாக நடைபெற பணி யாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா சென்னை திருவல்லிக்கேணியில் செவ்வாயன்று (ஜன. 11) நடைபெற்றது. வடசென்னை மாவட்டத் தலைவர் ப.சுந்தராம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.ஸ்ரீதரன் துவக்க உரையாற்றினார். ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்ப ரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம், சா.டேனியல் ஜெயசிங், ம.அந்தோணிசாமி ஆகியோர் பேசினர். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், இரா.தாஸ், கு.வெங்கடேசன், ஆர்.பெரு மாள்சாமி, பேராசிரியர் ஜெ.காந்திராஜ், கு.தியா கராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வரவேற்புக்குழு தலைவர் அ.சவுந்தரராசன் ஊழி யர்களை கவுரவித்து சிறப்பு ரையாற்றினார். முன்னதாக தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் இ.ரேணுகாதேவி வரவேற்றார். வடசென்னை மாவட்ட பொருளாளர் டி.ஏழு மலை நன்றி கூறினார்.