விழுப்புரம், செப். 23- திண்டிவனம் அரசு கல்லூரி அருகே ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 75 மாண வர்கள் தங்கி படித்து வரு கின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (செப். 23) காலை மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமால் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டி வனம் வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன், ரோசணை காவல் துறையினர் மாண வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதி கள் எதுவும் சரியான முறை யில் இல்லை. எங்களுக்கு வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை. அதோடு இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக் கிறது. எங்களால் படிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் விடுதியைச் சுற்றி புதர் மண்டிக் கிடப்ப தால் எங்களுக்கு பாது காப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே அடிப்படை வசதி கள் அனைத்தையும் நிறை வேற்றித் தந்தால்தான் போராட்டத்தை கைவிடு வோம் என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து தனி வட்டாட்சியர் இன்னும் ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் என்றும், புதிய கட்டிடம் விரை வில் கட்டப்படும் என்று தெரி வித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.