காஞ்சிபுரம், செப். 10 - காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமலை நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் ராம்பிரசாத் கடந்த (செப்.5) சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் செல்வகுமார், அவலூர் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரான சந்திரசேகர் ஆகியோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையை பள்ளியின் வளர்ச்சிக்காக தலைமையாசிரியர்களிடம் வழங்கினர்.