districts

img

சென்னையில் இன்சூரன்ஸ் ‘கதவடைப்பு வெற்றி பொன்விழா’

சென்னை, பிப். 5- வெறுப்பு அரசியலை புறக்கணிப்போம் என்று இன்சூரன்ஸ் கதவடைப்பு வெற்றி பொன்விழா கூட்டத்தில் கே.சுவாமிநாதன் பேசினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சாதனை சரித்திரம் “கதவடைப்பு எதிர்ப்புப் போராட்டம், வெற்றியின் பொன் விழா” என்ற தலைப்பில் காப்பீட்டு ஊழியர்  சங்கம் 2இன் சார்பில் சிறப்புக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. தலைவர் கே.மனோகரன் தலைமை தாங்கி னார். பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா  கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். “லாக் அவுட் பின்னணியும் - போராட்டத் தின் வெற்றியும்” என்ற தலைப்பில் தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர்  கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செய லாளர் கே.சுவாமிநாதன் பேசுகையில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அனைத்து போராட்டங்களும் வரலாற்றிலும் நினைவு கூறத்தக்க போராட்டங்கள் ஆகும். நாடு தற்போது ஒரு நெருக்கடியான காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எப்போ தெல்லாம் முதலாளித்துவம் நெருக்கடிக் குள் சிக்குகிறதோ அப்போதெல்லாம் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ‘நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் கூறமாட்டோம். ஆனால் வெறுப்பு அரசியல் வளர்க்கப்பட்டால் யாரெல்லாம் தாக்கப்படுவார்கள் என்பது தான் நம்முன் எழும் கேள்வி. எனவே ஆழமான விவாதங்கள் இன்று தேவைப்படு கிறது. உணர்ச்சிபூர்வமான விவாதங்களை கடந்து அறிவார்ந்த விவாதங்கள் தேவைப் படுகின்றன. எனவே ஜனநாயக உரிமை களை, மனித நேயத்தை பாதுகாப்போம், வெறுப்பு அரசியலை புறக்கணிப்போம்’ என்று சுவாமிநாதன் பேசினார். போராட்டத்தின் அனுபவங்கள் குறித்து  முன்னாள் பொதுச்செயலாளர் ஆர்.டி.தரணி பதி, பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார் ஆகியோரும் பேசினர். எஸ்.கங்காதரன் நன்றி கூறினார். முன்னதாக மூத்த தலை வர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் உதவி பொருளாளர் வி.ஜானகி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.