districts

img

மதுராந்தகம் ஏரி பராமரிப்பு பணிக்காக தண்ணீர் முழுவதும் வெளியேற்றம்

மதுராந்தகம், டிச.2- மதுராந்தகம் ஏரி பராமரிப்பு பணி காரண மாக ஏரிக்கு வரும் தண்ணீரை முழுவதும் வெளியேற்றப்படுவதால் மூன்றாவது ஆண்டாக விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவு 694 மில்லியன் கன அடி கொண்டதாகும் இந்த ஏரியை ஆழப்படுத்தி கரை மேம்படுத்துதல் மதகு கள் பராமரிப்பு பணிக்காக ரூபாய் 120 கோடியினை அரசு ஒதுக்கியது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. பணியின் காலம் 24 மாதமாகும். சென்றாண்டு ஏரி யில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளி யேற்றி பணியை ஆரம்பித்து இருந்த நிலையில் இந்த ஆண்டும் ஏரிக்கு வரும் தண்ணீரை ஏறி கரையை நடுவில் உடைப்பு ஏற்படுத்தி வெளியேற்றி வருகின்றனர். தற்போது ஏரிக்கு வரும் ஆயிரம் கன அடி தண்ணீரில் 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  இதனால் இந்த ஏரியை நம்பி உள்ள முள்ளி, வளர்பிறை, விழுதுமங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து ஏரி பாசன விவசாயம் முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் ஏரியின் நிலத்தடி நீரால் மதுராந்தகம் நகர் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது இந்த ஆண்டு ஏரியில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றுவதால் மதுராந்தகம் நகர மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.