சென்னை, ஜூலை 28-
சென்னை தேனாம்பேட்டையில் தென்னிந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் நடத்தப்படும் மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு குறித்த கருத்தரங்கை சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், உலக சுகாதார அமைப்பு 1,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் வேண்டும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் 3,000 நபர்க ளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையும், தென் மாநிலங்களில் 500 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையும் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை 250 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்கிறது என்றார். மேலும், தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாக வும், கிராமம் முதல் நகரம் வரை உயர்ந்த நிலையில் மருத்துவ கட்டமைப்பு இருப்பதாகவும் கூறினார்.
கொரோனா காலத்தில் கூட நமது உயர்தர மருத்துவ சிகிச்சையால் வென்று காட்டி உள்ளோம். அரசு மருத்துவமனையுடன் இணைந்து தனியார் மருத்துவமனை சிறப்பாக பணியற்றியதாகக் கூறினார். தமிழ்நாட்டில்தான் அரசு மருத்துவமனை யில் 35 கோடி மதிப்பில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம் ஓமந்தூரார் மருத்துவ மனையில் செயல்பட்டு வருகிறது என்றார்.
எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்க ளின் தரத்தை உலகளவில் உயர்த்த மெகா கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டு வருவதா கவும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசின் 71 கோடி ரூபாய் மானியத்துடன் 155 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் மருந்தியல் பெருங்குழும பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் அமைச்சர் பேசுகையில், தமிழ் நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதுவரை 26,000 இளைஞர்களுக்கு 700 கோடி ரூபாய்க்கு மானியம் வழங்கப்பட் டுள்ளது என்றார்.