சென்னை, ஆக. 7 -
இபிஎஸ்-1995 ஓய்வூதியம் பெறும் குடும்ப த்தினருக்கும், மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை இபிஎப் ஓய்வூ தியர் நலச்சங்கத்தின் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கே.பி.பாபு ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய, மாநில அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் பணி புரிந்து வருங்கால வைப்பு நிதி மூலம் தமிழகத்தில் சுமார் 9 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களில் 50 விழுக்காட்டினர் 500 - 1000 ரூபாய் மட்டுமே மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர். குறைந்தப்பட்ச ஓய்வூதியத்தை உயர்த்த கோரி தொடர்ந்து ஒன்றிய அரசை வலி யுறுத்தி வருகிறோம்.
இ.பி.எஸ். ஓய்வூதியர்களுக்கு கேரள மாநில அரசு 1600 ரூபாய் கூடுதலாக வழங்கி வருகிறது. அதேபோன்று தமிழகத்திலும் மாதம் 1600 ரூபாய் சமூக பாதுகாப்பு ஓய்வூ தியமாக வழங்க வேண்டும். தமிழக அரசின் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓய்வூதியர்களையும், அவரது துணைவர் / துணைவியர் ஆகியோரை இணைக்க வேண்டும்.
அரசுத்துறை, தனியார்துறை, பொதுத் துறைகளில் பணிபுரிந்து, ஓய்வூதியம் பெறு வோரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இதனால், வருங்கால வைப்புநிதி அலுவலகம் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக மிக சொற்ப தொகையினை பெறுவோரின் குடும்பத்தினர் பாதிக்கப்படு கின்றனர். எனவே, வருங்காலவைப்புநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தின ருக்கும் மகளிர் உரிமைதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.